‘வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ - நிர்மலா சீதாராமனிடம், டி.கே.ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தல்


‘வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ - நிர்மலா சீதாராமனிடம், டி.கே.ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 July 2019 8:45 PM GMT (Updated: 23 July 2019 7:59 PM GMT)

வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நிர்மலா சீதாராமனிடம், டி.கே.ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன், அகில இந்திய தேசிய வங்கி கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி.பாலாஜி, பொதுச்செயலாளர் எஸ்.கே. பண்டலேஷ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தொழிற்சங்க தலைவர் இரா.முகுந்தன் ஆகியோர் டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தனர்.

அப்போது, வங்கி ஊழியர்களின் ஊதியம் குறித்தும், வங்கி தொழிலாளர், நிர்வாக உறுப்பினர்களின் காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும் நிதி மந்திரியிடம் அவர்கள் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமன், கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்ததாக டி.கே.ரங்க ராஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Next Story