காஷ்மீர் நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது, இதில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை -ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
காஷ்மீர் என்பது நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது, இதில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதுடெல்லி
ட்ரம்பின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்து பேசியதாவது:-
ஜெய்சங்கர் ஜி (வெளிவிவகார அமைச்சர்) கூறியது போல், ஜனாதிபதி டிரம்ப் - பிரதமர் மோடி கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படவில்லை. சிம்லா ஒப்பந்தத்திற்கு எதிரானதாக இருப்பதால் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. காஷ்மீர் என்பது நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது, இதில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறினார்.
காஷ்மீர் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story