காங்கிரசுடனான கூட்டணி தொடர்பாக குமாரசாமி கருத்து


காங்கிரசுடனான கூட்டணி தொடர்பாக குமாரசாமி கருத்து
x
தினத்தந்தி 24 July 2019 10:17 AM GMT (Updated: 24 July 2019 10:17 AM GMT)

காங்கிரசுடனான கூட்டணி தொடர்பாக குமாரசாமி தன்னுடைய கருத்தை பதிவுசெய்துள்ளார்.

கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தோல்வி அடைந்தது.

கர்நாடகத்தில் 14 மாதங்கள் நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் குமாரசாமியிடம் இருகட்சிகள் இடையிலான கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. குமாரசாமி பதில் அளிக்கையில், “கூட்டணி தொடர்பாக எந்த விவகாரத்தையும் எங்களுடன் அவர்கள் ஆலோசிக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாக உள்ளனர். நாங்களும் அப்படியே செயல்படுகிறோம்,  கூட்டணி தேவையென்றால் நாங்கள் இணைந்து செயல்படுவோம். மற்றப்படி எங்களுடைய கட்சியை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து ஸ்திரமாக பணியாற்றுவோம்,” எனக் கூறியுள்ளார்.

Next Story