மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்; சுவர் இடிந்து விழுந்து பெண் பலி


மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்; சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 25 July 2019 5:02 AM GMT (Updated: 25 July 2019 5:02 AM GMT)

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவானது.

இந்நிலநடுக்கத்தில் தஹானு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தது.  இந்த சம்பவத்தில் அதில் வசித்து வந்த 55 வயது நிறைந்த பெண் ஒருவர் சிக்கி பலியாகி உள்ளார்.

Next Story