ராணுவ குழு ரோந்தில் கலந்து கொள்ளும் கவுரவ லெப்டினன்ட் கலோனல் டோனி


ராணுவ குழு ரோந்தில் கலந்து கொள்ளும் கவுரவ லெப்டினன்ட் கலோனல் டோனி
x

ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கலோனலாக உள்ள கிரிக்கெட் வீரர் டோனி வரும் 31-ம் தேதி முதல் ரோந்து செல்கிறார்.

புதுடெல்லி

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து டோனியின் எதிர்காலம் குறித்து ஊகங்கள் தீவிரமடைந்தன.

இந்நிலையில், டோனி தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்து இருந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ள வில்லை.

ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கலோனலாக உள்ள கிரிக்கெட் வீரர் டோனி வரும் 31-ம் தேதி முதல் ரோந்து செல்கிறார். ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் காஷ்மீர் பகுதியில் டோனி அடங்கிய ராணுவ குழு ரோந்து பணியை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவப்படையுடன் தங்கியிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளிலும் டோனி ஈடுபட உள்ளார்.

Next Story