6 விமான நிலையங்கள் தனியார் மயமாகின்றன - மத்திய அரசு தகவல்


6 விமான நிலையங்கள் தனியார் மயமாகின்றன - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 26 July 2019 12:06 AM GMT (Updated: 26 July 2019 12:06 AM GMT)

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் உள்ளதா? கொல்கத்தா விமான நிலையம் தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா? போன்ற கேள்விகளை எழுப்பினார்.

புதுடெல்லி, 

 சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரி பதிலளிக்கும் போது கூறுகையில், ‘விமான நிலையங்களின் தகுதியின் அடிப்படையில் அவற்றை தனியார் மயமாக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி தனியார் மயமாக்கலுக்காக 6 விமானங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் 3 விமான நிலையங்களை தனியாருக்கு அளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கொல்கத்தா விமான நிலையத்தை உடனடியாக தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை’ என்று கூறினார்.

இந்த விமான நிலையங்களை பெற்றிருக்கும் நிறுவனம் எது? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 6 விமான நிலையங்களுக்காக 9 நிறுவனங்களிடம் இருந்து ஏல டெண்டர்கள் பெறப்பட்டன எனவும், இதில் 3 விமான நிலையங்கள் அதானி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.


Next Story