தானேவில் நிலச்சரிவு : இருவர் பலி ; ஒருவர் படுகாயம்


தானேவில் நிலச்சரிவு : இருவர் பலி ; ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 30 July 2019 6:42 AM GMT (Updated: 30 July 2019 6:42 AM GMT)

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.

தானே, 

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று அதுகாலையில் தானே மாவட்டம் கல்வா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் தந்தை, மகன் சிக்கிக்கொண்டனர். 

இடிபாடுகளில்  சிக்கிக்கொண்ட பிரேந்திர கவுதம் மற்றும்  அவரது மகன் சன்னி கவுதம் இருவரும் மீட்கப்பட்டு சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இருவரும் வழியிலேயே  இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே குடும்பத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தானேவில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை குழுவினரால் இதுவரை 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story