மராட்டியத்தில் வங்கியின் மேல்தளம் இடிந்து விழுந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு


மராட்டியத்தில் வங்கியின் மேல்தளம் இடிந்து விழுந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 31 July 2019 12:02 PM GMT (Updated: 31 July 2019 12:02 PM GMT)

மராட்டியத்தில் வங்கியின் மேல்தளம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

சோலாபூரில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கிளையில் காலை 11 மணியளவில் மேல்தளம் இடிந்து விழுந்துள்ளது. விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மழையின் காரணமாக கட்டிடம் மோசமான நிலையில் இருந்துள்ளது. இன்று காலையில் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் குவிந்திருந்த நிலையில் கட்டிடம் விழுந்து விபத்து நேரிட்டுள்ளது. சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். 

Next Story