உன்னோவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உ.பி. அரசின் தோல்வியை காட்டுகிறது - பிரியங்கா காந்தி


உன்னோவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உ.பி. அரசின் தோல்வியை காட்டுகிறது - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 2 Aug 2019 8:09 AM GMT (Updated: 2 Aug 2019 8:09 AM GMT)

உன்னோவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உ.பி. அரசின் தோல்வியை காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் உ.பி. மாநிலம் உன்னோவ் தொகுதியின் எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வரும் நிலையில் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னுடைய உறவினர்கள், வழக்கறிஞருடன் கடந்த ஞாயிறு அன்று சிறையிலிருக்கும் மாமாவை பார்க்க சென்றுள்ளார். 

அப்போது அவருடைய கார் மீது லாரி மோதியது. இருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது கொலை முயற்சியென பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை 7 நாட்களில் முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விசாரணை டெல்லிக்கு மாற்றப்படுகிறது.

இந்த நிலையில், உன்னோவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு , உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி நடைபெறுகிறது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

Next Story