காஷ்மீரின் லடாக் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இன்று செயல்படும்


காஷ்மீரின் லடாக் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இன்று செயல்படும்
x
தினத்தந்தி 5 Aug 2019 3:34 AM GMT (Updated: 5 Aug 2019 3:34 AM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை குறிவைத்து நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

இந்த தகவல்களை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை முன்னிட்டு ஜம்முவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதேவேளையில், காஷ்மீரின் லடாக் பகுதியில் கோடை கால விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் திறக்கப்படும்.  இதேபோன்று கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும்.  இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

Next Story