காங்கிரஸ் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, பா.ஜனதாவை தோற்கடிக்கலாம் - அஸ்லாம் சேர் கான்


காங்கிரஸ் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, பா.ஜனதாவை தோற்கடிக்கலாம் -  அஸ்லாம் சேர் கான்
x
தினத்தந்தி 7 Aug 2019 12:06 PM GMT (Updated: 7 Aug 2019 12:06 PM GMT)

காங்கிரஸ் 12 கோடி மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது, அக்கட்சியால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்லாம் சேர் கான் கூறியுள்ளார்.

2019 தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரசில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருகிறது. தலைமையில்லாத காரணத்தினால் ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலும் மாறுபட்ட நிலைப்பாடு கட்சிக்குள் காணப்பட்டது. தேர்தல்களில் எல்லாம் பா.ஜனதாவே வெற்றி கொடியை நாட்டிவரும் நிலையில், காங்கிரஸ் 12 கோடி மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது, அக்கட்சியால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்லாம் சேர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 முன்னாள் ஹாக்கி வீரரான அஸ்லாம்  சேர் கான் பேசுகையில், “காங்கிரஸ் தேர்தலில் தோல்வியை தழுவினாலும், 12 கோடி மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது. 23 கோடி மக்கள் பா.ஜனதாவிற்கு வாக்களித்தாலும் 12 கோடி மக்கள் நம்பிக்கையை காங்கிரசிடம் வைத்துள்ளனர். சோம்பேறியாக இருப்பதைவிட புதியதாக ஸ்திரமான பணியை தொடங்க வேண்டும். தடையாக எழுந்துள்ள பணிகளை சவாலாக கொண்டு பணியாற்ற வேண்டும். இது ஒரு பெரிய சவால் என்றாலும், கடினமான பணியென சொல்லிவிடமுடியாது. திறமையாக செயல்பட்டு மக்களை நாட வேண்டும், காங்கிரஸ் கடுமையாக உழைத்திருந்தால், இந்த 12 கோடி வாக்கை 25 கோடியாக மாற்றியிருக்கலாம். காங்கிரஸ் ஸ்திரமாக, நம்பிக்கையுடன் செயல்பட்டால்  பா.ஜனதாவை தோற்கடிக்கலாம்,” எனக் கூறியுள்ளார். 

Next Story