சுஷ்மா சுவராஜ் எனக்கு 2–வது தாய் மும்பை வாலிபர் உருக்கம்


சுஷ்மா சுவராஜ் எனக்கு 2–வது தாய் மும்பை வாலிபர் உருக்கம்
x
தினத்தந்தி 7 Aug 2019 5:58 PM GMT (Updated: 7 Aug 2019 5:58 PM GMT)

பாக். சிறையில் இருந்து சுஷ்மா சுவராஜ் என்னை மீட்டார். எனக்கு 2–வது தாய் என மும்பை வாலிபர் உருக்கமாக கூறியுள்ளார்.


மும்பை, 

மும்பையை சேர்ந்தவர் ஹமீது நிஹால் அன்சாரி (வயது 36). சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றிய இவர், தற்போது, தோல் தொழில் செய்து வருகிறார். 2010–ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றபோது, உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு, அங்குள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த சுஷ்மா சுவராஜின் முயற்சிகளால், கடந்த 2016–ம் ஆண்டு விடுதலையாகி இந்தியாவுக்கு திரும்பினார்.

சுஷ்மா சுவராஜ் மறைவு குறித்து அன்சாரி உருக்கமாக கூறியதாவது:–

சுஷ்மா சுவராஜ் முயற்சியால்தான் நான் விடுதலை ஆனேன். வாகா எல்லையில் என்னை ஒப்படைத்தபோது, என் பெற்றோரை சந்தித்தேன். அப்போது, எனக்கு ஒரு தாய் தான்.

பின்னர், சுஷ்மா சுவராஜை சந்தித்தபோது, அவர் என்னை கட்டிப்பிடித்து தைரியம் அளித்தார். அப்போது, எனக்கு 2–வது தாயாக தெரிந்தார். அந்த இழப்பை இப்போது உணர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story