கேரளா, கர்நாடகா, மராட்டியத்தில் கடும் வெள்ள பாதிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் பேர் பலி


கேரளா, கர்நாடகா, மராட்டியத்தில் கடும் வெள்ள பாதிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் பேர் பலி
x
தினத்தந்தி 11 Aug 2019 2:05 AM GMT (Updated: 11 Aug 2019 2:05 AM GMT)

கேரளா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

நடப்பு ஆண்டு பருவமழையால் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா, மராட்டியம், கர்நாடாகா,குஜராத் ஆகிய மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.  

கேரளாவில் வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவால் 57-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1.66 லட்சம்  தங்கள் இருப்பிடத்தை விட்டு, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். கர்நாடகாவில் 30 பேர் பலியாகியுள்ளனர். மரட்டியம், குஜராத் மாநிலங்களிலும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மராட்டியத்தில் பெய்து வரும் பலத்த மழைக்கு இந்த வாரத்தில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப் படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் அறிவித்துள்ளார். இதேபோல் குஜராத்தில் மழைக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story