உள்ளூர் நிர்வாகம் அனுமதியை கொடுத்த பின்னர்தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - மத்திய உள்துறை அமைச்சகம்


உள்ளூர் நிர்வாகம் அனுமதியை கொடுத்த பின்னர்தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - மத்திய உள்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 13 Aug 2019 12:33 PM GMT (Updated: 13 Aug 2019 12:33 PM GMT)

உள்ளூர் நிர்வாகம் அனுமதியை கொடுத்த பின்னர்தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது என்பது உள்ளூர் அதிகாரிகள் ஆய்வு செய்து நிலை சரியாக உள்ளது என்று அறிக்கையளித்தால் மட்டுமே சாத்தியமாகும் என உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி கூறியுள்ளார். 

கட்டுப்பாடுகள் அல்லது உயிரிழப்பு என்பதற்கு இடையிலான தேர்வாக உள்ளது. காஷ்மீரில் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  

2016-ம் ஆண்டில் புர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து தடையற்ற போராட்டங்களால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டது. பின்னர் பல மாதங்கள் தொடர்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இம்முறை வன்முறை மற்றும் உயிர் இழப்பை குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  ஸ்ரீநகர் நகரத்தை ஹுரியத் அடிக்கடி பூட்டிக் கொண்டிருந்தபோது, அதற்கு அனுதாபம் ஏற்பட்டது என்று ஊடகங்களில் விஷயங்கள் திட்டமிடப்பட்டிருப்பது குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

உள்ளூர் அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் பள்ளத்தாக்கில் உள்ள அரசியல்வாதிகள் சட்டப்பூர்வமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், எப்போது விடுவிக்கப்படலாம் என்பதை அங்குள்ள அதிகாரிகள்தான் தீர்மானிப்பார்கள். அவர்கள் அரசியல் கைதிகள் கிடையாது. சமூக ஊடக தளங்கள் மூலம் குறும்புகளை உருவாக்கும் நபர்களை அமைச்சகம் தீவிரமாக கவனித்து வருவதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கிறது.


Next Story