கேரளாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு - 31 பேரை காணவில்லை


கேரளாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு - 31 பேரை காணவில்லை
x
தினத்தந்தி 16 Aug 2019 6:58 PM GMT (Updated: 16 Aug 2019 6:58 PM GMT)

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. மேலும் 31 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த 8-ந் தேதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், நிலச்சரிவும் ஏற்பட்டது. நேற்று மழை ஓய்ந்தநிலையில், மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. அதிக அளவாக, மலப்புரம் மாவட்டத்தில் 48 பேர் பலியாகி உள்ளனர்.

இன்னும் 31 பேரை காணவில்லை. நிவாரண முகாம்களில் ஒன்றரை லட்சம்பேர் தங்கி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இதற்கிடையே, டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 22 டன் மருந்து பொருட்கள் நேற்று வந்து சேர்ந்தன.

Next Story