அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கில் வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - சி.பி.ஐ.க்கு தனிக்கோர்ட்டு உத்தரவு


அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கில் வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - சி.பி.ஐ.க்கு தனிக்கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2019 9:47 PM GMT (Updated: 19 Aug 2019 9:47 PM GMT)

அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கில் வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐ.க்கு தனிக்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் பரேலி ஆகிய இடங்களில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 9 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இந்திய மருத்துவ கவுன்சில் சோதனை நடத்தியபோது எடுத்த வீடியோ ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை வரும் 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story