சிதம்பரத்தின் செயல்பாடு மல்லையா, நிரவ் மோடி போல் உள்ளது: பாஜக காட்டம்
சிதம்பரத்தின் செயல்பாடு விஜய் மல்லையா, நிரவ் மோடி போல் உள்ளது என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் தரப்பினர் மேல் முறையீடு செய்தனர்.
மனுவை பட்டியலிடாமல் விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத்தெரிகிறது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் தலைமறைவாகிவிட்டார் எனவும், ப.சிதம்பரத்தின் செயல்பாடு விஜய் மல்லையா, நிரவ் மோடி போல் உள்ளது என்றும் பாரதீய ஜனதா தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் இவ்வாறு விமர்சித்தார்.
Related Tags :
Next Story