மராட்டியத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவசேனாவில் இணைந்தார்


மராட்டியத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவசேனாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 21 Aug 2019 8:36 PM GMT (Updated: 21 Aug 2019 8:36 PM GMT)

மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் சிவசேனாவில் இணைந்தார்.

மும்பை,

மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இகாத்புரி தொகுதி எம்.எல்.ஏ.வான நிர்மலா காவித் கட்சி தாவி உள்ளார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, நேற்று உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.

Next Story