ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வந்த அதிகாரி ராகேஷ் அகுஜா டெல்லி போலீசுக்கு திடீர் மாற்றம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வந்த அதிகாரி ராகேஷ் அகுஜா டெல்லி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை, அமலாக்கத்துறை சார்பில் விசாரித்து வந்த விசாரணை அதிகாரி ராகேஷ் அகுஜா திடீரென டெல்லி போலீசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், அமலாக்கத்துறையில் ராகேஷ் அகுஜாவின் பதவிக்காலம் 3 வாரத்திற்கு முன்பே முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் டெல்லி போலீஸ் பணிக்கு திரும்பி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story