ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
கைது செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில், தனக்கு முன் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட் அண்மையில் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அந்த உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை , உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது. சிபிஐ தொடர்புடைய மேல்முறையீட்டு வழக்கும் அன்றைய தினமே விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story