அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்


அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 23 Aug 2019 7:34 AM GMT (Updated: 23 Aug 2019 7:34 AM GMT)

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமலாக்கத்துறை வழக்கில் வரும் ஆக.26 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Next Story