புதுச்சேரி: 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது - அதிமுக வெளிநடப்பு
புதுச்சேரி அரசின் 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசின் 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கவர்னர் கிரண்பெடி உரையாற்றி வருகிறார். 28-ந்தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி ரூ.8 ஆயிரத்து 425 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்ய உள்ளது.
கூட்டம் தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பிற்குப்பின் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் கூறும்போது, ''கடந்த 3 ஆண்டு காலமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்'' என கூறினார்.
Related Tags :
Next Story