ப.சிதம்பரத்தின் வழக்கு ஆவணங்களை கசியவிடவில்லை : அமலாக்கத்துறை மறுப்பு


ப.சிதம்பரத்தின் வழக்கு ஆவணங்களை கசியவிடவில்லை : அமலாக்கத்துறை மறுப்பு
x
தினத்தந்தி 26 Aug 2019 8:32 AM GMT (Updated: 26 Aug 2019 8:32 AM GMT)

ப.சிதம்பரத்தின் வழக்கு ஆவணங்களை கசியவிடவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

பின்னர் அவரை தங்களது தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை 26-ந் தேதி (இன்று) வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன்  முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை இன்று மாலை ஆஜர்படுத்துவார்கள் 

இந்த் நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கோரிய மனு மீது சுப்ரீம் கோட்டில்  விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐஎன்எஸ்சுக்கு கொடுத்த அனுமதி மூலம் சொத்து சேர்த்து இருந்ததாக நிரூபித்தால் வழக்கை வாபஸ் பெற தயார் என ப.சிதம்பரம் தரப்பில் கபில் சிபில் வாதாடினார். 

தொடர்ந்து வாதாடிய கபில்சிபல்  மின்னஞ்சல்கள், சொத்துக்களை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்கிறார்.  ஆனால் இது குறித்து 3 விசாரணைகளின் போது அமலாக்கத்துறை எதுவும் தெரிவிக்கவில்லை.

 வழக்கு தொடர்பான ஆவணங்களை எப்போது கைப்பற்றினார்கள். அமலாக்கத்துறை விளக்க வேண்டும்

 அவர்கள் நீதிமன்றத்திற்கு எந்த ஆவணத்தையும் கொடுப்பது அல்லது காண்பிக்காமல்  இருக்க முடியாது, அதைப் பார்க்க எனக்கு உரிமை இல்லை. அவர்கள் அதை ஊடகங்களுக்கு கசிய விடுகிறார்கள். அவர்கள் அமலாக்க பிரிவு  வாக்குமூலத்தை ஊடகங்களுக்கு கசியவிட்டனர்  என வாதிட்டார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும் போது  அமலாக்க பிரிவு பிரமாண பத்திரத்தை கசியவிடவில்லை, இது சிதம்பரத்தின் வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட பின்னர் தான்  கசிந்தது என்று வாதிட்டார்.

கபில் சிபில்  வாதிடும் போது, 

ப.சிதம்பரத்திடம், உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருக்கிறதா? என்று சிபிஐ கேட்கிறது. என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன? 26 மணிநேர பரிசோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறினார்

சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தவிர்த்து, வேறு என்ன ஆவணங்கள் ப.சிதம்பரத்திற்கு எதிராக உள்ளன?  என சுப்ரீம் கோர்ட்  நீதிபதி பானுமதி கேள்வி எழுப்பினார் 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தப்பிக்க நினைக்கிறார். ப.சிதம்பரத்திடம் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து நீதிமன்றம் கருத்தில் கொள்ளக் கூடாது என துஷார் மேத்தா கூறினார்.

பின்னர்  உணவு இடைவேளைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story