சிகிச்சைக்காக சென்ற சிறுமி ஆஸ்பத்திரியில் பாலியல் பலாத்காரம்


சிகிச்சைக்காக சென்ற சிறுமி ஆஸ்பத்திரியில் பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 26 Aug 2019 7:58 PM GMT (Updated: 26 Aug 2019 7:58 PM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி சென்ற சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஆக்ரா,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள அரசு காச நோய் ஆஸ்பத்திரிக்கு 17 வயது சிறுமி சிகிச்சைக்காக சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த வார்டு ஊழியர் சிவானந்தன் (வயது 23), அந்த சிறுமியிடம் கீழ்தளத்துக்கு செல்லுங்கள், ஊசி போடுகிறேன் என கூறி உள்ளார்.

அந்த சிறுமி வார்டு ஊழியருடன் கீழ்தளத்துக்கு சென்றதும் அவர் அங்கிருந்த ஊசியை எடுத்து போட்டுவிட்டு, சில மாத்திரைகளை கொடுத்தார். அப்போது மற்றொரு ஊழியரான விஷால் (24) அங்கு இருந்தார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் அந்த சிறுமி மயக்கம் அடைந்தார். பின்னர் இருவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வெகுநேரம் கழித்து அந்த சிறுமி கண் விழித்தபோது அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் பலாத்காரம் செய்த சிவானந்தன், விஷால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் சிவானந்தன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Next Story