பகுஜன் சமாஜ் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு


பகுஜன் சமாஜ் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு
x
தினத்தந்தி 28 Aug 2019 8:30 PM GMT (Updated: 28 Aug 2019 8:30 PM GMT)

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சியின் சிறப்புக்கூட்டம் நேற்று உத்தரபிரதேசத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில், கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், தன்னை மீண்டும் தலைவராக தேர்வு செய்தமைக்காக கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் எனவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

மேலும் விரைவில் நடைபெற உள்ள அரியானா, டெல்லி, மராட்டியம், ஜார்கண்ட் மாநில தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி முழு பலத்துடன் போட்டியிடும் எனவும் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக போராடி வெற்றிபெறுவோம் என்றும் அறிவித்தார்.


Next Story