மாயாவதி மின்சார கம்பி போன்றவர் அவரை தொட்ட எவரும் இறந்துவிடுவர் உபி மந்திரி சர்ச்சை பேச்சு


மாயாவதி மின்சார கம்பி போன்றவர் அவரை தொட்ட எவரும் இறந்துவிடுவர் உபி மந்திரி சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 29 Aug 2019 5:42 AM GMT (Updated: 29 Aug 2019 5:42 AM GMT)

மாயாவதி ஒரு மின்சார கம்பி போன்றவர் அவரை தொட்ட எவரும் இறந்து விடுவார்கள் என உத்தரபிரதேச மந்திரி ஒருவர் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

லக்னோ

உத்தரபிரதேச சமூக நலத்துறை மற்றும் எஸ்சி / எஸ்டி நலத்துறை மந்திரி  கிரிராஜ் சிங் தர்மேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாயாவதி நம்பகமானவர் அல்ல, அனைவருக்கும் துரோகம் இழைத்துள்ளார். அதிகபட்ச நன்மைகளைப் பெற்ற பிறகு மற்றவர்களைக் காட்டிக் கொடுக்கும் "நம்பத்தகாதவர்". “மாயாவதி  மின்சார கம்பி போன்றவர்  அவரை தொட்ட எவரும் இறந்துவிடுவார்கள் அல்லது அழிக்கப்படுவார்கள். அவர் சமாஜ்வாதி கட்சியைப் பயன்படுத்தி கொண்டார். பாராளுமன்றத்தில்  தனது கட்சியின் வலிமையை 10 ஆக உயர்த்தி  கொண்டார், பின்னர் அந்தக் கட்சியைத் தள்ளிவிட்டார்  என கூறினார்.

Next Story