நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது: காங்கிரஸ் விமர்சனம்


நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது: காங்கிரஸ் விமர்சனம்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:56 AM GMT (Updated: 30 Aug 2019 8:28 AM GMT)

நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

பொருளாதார மந்த நிலையை மறைப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து வலுக்கட்டாயமாக ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்று இருப்பதாகவும், நாட்டை நிதி நெருக்கடி நிலையை நோக்கி காங்கிரஸ் தள்ளுவதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.  தன்னிடம் உள்ள உபரி நிதிகளில் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு அளிக்க ரிசர்வ் வங்கி திங்கள்  கிழமை ஒப்புதல் அளித்தது. 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ ரிசர்வ் வங்கி அவசர நிதி ஆறு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குறைவான அளவு உள்ளது.  பாஜக அரசு, மோசமான பொருளாதார மந்த நிலையை மறைப்பதற்காக ரூ. 1.76 லட்சம் கோடி நிதியை ரிசர்வ் வங்கியிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெற்றுள்ளது. நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை மத்திய அரசு தள்ளுகிறது” என்று பதிவிட்டுள்ளார். 

வங்கி மோசடி கடந்த ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் உயர்ந்ததாக நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டி மற்றொரு பதிவிட்டுள்ள சுர்ஜேவாலா, “கொள்ளையடிப்பதும் தப்பி ஓடுவதும் புதிய இந்தியாவில் உள்ளது. இதற்கு உடந்தையாக இருக்கும் பாஜக மாற்று வழிகளை தேடுவதோடு, சாதாரண மனிதனிடம் வரியை விதிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Next Story