ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 30 Aug 2019 5:42 AM GMT (Updated: 30 Aug 2019 5:42 AM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

புதுடெல்லி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் சி.பி.ஐ. ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகிறது. அவருடைய காவல் விசாரணை 30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் செப்டம்பர் 5-ந்தேதி  வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உள்ளது. மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில்  ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை அமலாக்கதுறை  சீலிடப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. 

Next Story