வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும்- நிர்மலா சீதாராமன்
வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி
டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வங்கிகள் இணைக்கப்படுவதால் 27 பொதுத்துறை வங்கிகளில் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும்
* 7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
* செலவினங்களை குறைக்கவும், அதிக அளவில் வங்கி சேவையை அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
* உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
* வங்கிகள் இணைப்பால் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும்.
* வங்கி உயர் அதிகாரிகளின் ஊதிய உயர்வை இனி நிர்வாக குழுவே முடிவு செய்யும்.
* வங்கி முடிவுகளை கண்காணித்து நெறிப்படுத்த வெளியில் இருந்து அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவர்.
* வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story