செப்-2ல் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்


செப்-2ல் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 30 Aug 2019 3:09 PM GMT (Updated: 30 Aug 2019 3:09 PM GMT)

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் செப்-2ல் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு 5 நாள் அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு வெளியிட்டுள்ள செய்தியில், 

இந்திய ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஜப்பான்,  தென்கொரியா நாடுகளுக்கு 5 நாள் அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். 

இந்த பயணத்தின் போது அந்நாட்டு மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் இந்திய ராணுவத்தை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துக்கிறார். ராஜ்நாத் சிங் ஜப்பான் பயணத்தின் போது அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவையும் சந்தித்து பேசுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story