மகாராஷ்டிர மாநிலம் துலேவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து 8 பேர் பலி?


மகாராஷ்டிர மாநிலம் துலேவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து 8 பேர் பலி?
x
தினத்தந்தி 31 Aug 2019 6:20 AM GMT (Updated: 31 Aug 2019 6:20 AM GMT)

மகாராஷ்டிர மாநிலம் துலேவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் பலியாகி இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை

மகாராஷ்டிர மாநிலம்  துலே என்ற இடத்தில் ஒரு ரசாயன தொழிற்சாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. தொழிற்சாலையை சுற்றிலும் கரும் புகையாக காணப்படுகிறது. தீயை அணைக்க சுற்று வட்டாரத்தில் இருந்து தீயணைக்கும் படைகள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த விபத்தில் 8 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை 8 பேரின் உடல்கள் மீடகப்பட்டு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story