மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 12 Sep 2019 5:20 AM GMT (Updated: 12 Sep 2019 5:20 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் முன்னேற்ற நிலையில் தொடங்கியது.  இதனால் வங்கி துறை, உலோகம் மற்றும் ஆற்றல் துறை பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.  சென்செக்ஸ் குறியீடு நேற்று 125.37 புள்ளிகள் உயர்ந்து 37,270.82 புள்ளிகளாக முடிவடைந்தது.

இந்த நிலையில், இன்று சென்செக்ஸ் குறியீடு 129.68 புள்ளிகள் உயர்வடைந்து 37,400.50 புள்ளிகளாக உள்ளது.  தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 34.65 புள்ளிகள் உயர்ந்து 11,070.35 புள்ளிகளாக உள்ளது.

இதேபோன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 36 காசுகள் உயர்வடைந்து ரூ.71.30 காசுகளாக இருந்தது.  எனினும், இந்த லாப நிலை தொடர்ந்து நீடிக்காமல் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து ரூ.71.35 ஆனது.

Next Story