நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது - மாயாவதி குற்றச்சாட்டு
நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டி மாயாவதி டுவிட் செய்து உள்ளார்.
புதுடெல்லி
உத்தரபிரதேச முன்னாள் முதல் - மந்திரியும் , பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டி டுவிட் செய்து உள்ளார்.
மாயாவதி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைபாட்டால் நாட்டில் "வகுப்புவாத சக்திகள்" வலுவடைந்து வருகின்றன. ஏனெனில் வகுப்புவாத சக்திகளை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் சக்திகளை பலவீனப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும், ” என கூறி உள்ளார்.
ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேர் காங்கிரசுக்கு முகாம் மாறிய உடனேயே, மாயாவதி நேற்று காங்கிரஸ் ஒரு நம்பத்தகாத கட்சி என கூறி இருந்தார்.
இது பகுஜன் சமாஜ் கட்சியை காட்டிக் கொடுக்கும் செயலாகும், பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வந்தது. காங்கிரஸ் தனது எதிர்க்கட்சிகளுடன் சண்டையிடுவதற்கு பதிலாக, அதை ஆதரிக்கும் கட்சிகளை மட்டுமே காயப்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
"இது காங்கிரஸை எஸ்சி எதிர்ப்பு, எஸ்டி எதிர்ப்பு மற்றும் ஓபிசி எதிர்ப்பு கட்சியாக ஆக்குகிறது, மேலும் இந்த குழுக்களின் இடஒதுக்கீடு உரிமைகள் குறித்து இது ஒருபோதும் தீவிரமாகவும், நேர்மையாகவும் காங்கிரஸ் இருந்ததில்லை" என்று அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
कांग्रेस पार्टी की दोग़ली नीति की वजह से ही देश में ’‘साम्प्रदायिक ताकतें’’ मजबूत हो रही है, क्योंकि कांग्रेस पार्टी साम्प्रदायिक ताकतों को कमजोर करने के बजाय, इसके विरूद्ध आवाज उठाने वाली ताकतों को ही ज्यादातर कमजोर करने में लगी है। जनता सावधान रहे।
— Mayawati (@Mayawati) September 18, 2019
Related Tags :
Next Story