வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து
வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
புனே,
மராட்டிய மாநிலம் புனேவில், அகில இந்திய முற்போக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
நமது நாட்டின் பிரதிநிதியாக பிரதமர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கும்போது, அவர் மரியாதைக்கு உரியவர் ஆகிறார். அதனால் அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அதே சமயத்தில் அவர் இந்தியாவில் இருக்கும்போது, அவரிடம் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இருக்கிறது. பொது மொழி விவகாரத்தில், இந்தியையும், இந்துத்துவாவையும் தூக்கிப் பிடிக்கும் பா.ஜனதாவின் போக்கு ஆபத்தானது. இருப்பினும், மும்மொழி கொள்கையை நான் ஆதரிக்கிறேன்.
கும்பல் கொலைகள், இந்துத்துவத்துக்கும், ராமருக்கும் இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.
மராட்டிய மாநிலம் புனேவில், அகில இந்திய முற்போக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
நமது நாட்டின் பிரதிநிதியாக பிரதமர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கும்போது, அவர் மரியாதைக்கு உரியவர் ஆகிறார். அதனால் அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அதே சமயத்தில் அவர் இந்தியாவில் இருக்கும்போது, அவரிடம் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இருக்கிறது. பொது மொழி விவகாரத்தில், இந்தியையும், இந்துத்துவாவையும் தூக்கிப் பிடிக்கும் பா.ஜனதாவின் போக்கு ஆபத்தானது. இருப்பினும், மும்மொழி கொள்கையை நான் ஆதரிக்கிறேன்.
கும்பல் கொலைகள், இந்துத்துவத்துக்கும், ராமருக்கும் இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story