மத்தியபிரதேசம்: கோர்ட்டில் நீதிபதி திடீர் மாயம்


மத்தியபிரதேசம்: கோர்ட்டில் நீதிபதி திடீர் மாயம்
x
தினத்தந்தி 23 Sep 2019 7:34 PM GMT (Updated: 23 Sep 2019 7:34 PM GMT)

மத்தியபிரதேச மாநிலத்தில் கோர்ட்டுக்கு வந்த நீதிபதி ஒருவர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள சிவில் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர் ஆர்.பி.சிங் (வயது 35). நேற்று முன்தினம் கோர்ட்டுக்கு வந்த ஆர்.பி.சிங், காலை 11 மணிக்கு திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிபதியை தேடி வருகிறார்கள். கோர்ட்டுக்கு வந்த நீதிபதி மாயமான சம்பவம் மத்தியபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story