விலை உயர்வு எதிரொலி: மராட்டியத்தில் ரூ.1 லட்சம் வெங்காயம் திருட்டு
விலை உயர்வு எதிரொலியாக, மராட்டியத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் திருடப்பட்டது.
மும்பை,
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வன் தாலுகா பகுதியை சேர்ந்தவர் ராகுல் பாஜிராவ். விவசாயியான இவர், தான் சாகுபடி செய்த ரூ.1 லட்சம் மதிப்பிலான வெங்காயத்தை கிடங்கில் சேமித்து வைத்து இருந்தார். யாரோ மர்ம நபர்கள் அந்த வெங்காயத்தை திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் பாஜிராவ், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வன் தாலுகா பகுதியை சேர்ந்தவர் ராகுல் பாஜிராவ். விவசாயியான இவர், தான் சாகுபடி செய்த ரூ.1 லட்சம் மதிப்பிலான வெங்காயத்தை கிடங்கில் சேமித்து வைத்து இருந்தார். யாரோ மர்ம நபர்கள் அந்த வெங்காயத்தை திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் பாஜிராவ், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story