ஆள் இல்லாத சக்கர நாற்காலி தானாக நகர்ந்து சாலையில் சென்றது


ஆள் இல்லாத சக்கர நாற்காலி தானாக நகர்ந்து சாலையில் சென்றது
x
தினத்தந்தி 25 Sep 2019 9:01 AM GMT (Updated: 25 Sep 2019 9:01 AM GMT)

மருத்துவமனையின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சக்கர நாற்காலி ஒன்று தானாகப் புறப்பட்டு சாலையில் சென்று நின்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

சண்டிகர், 

சண்டிகர் மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் இந்த வியக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இரண்டு இருக்கைகளுக்கு நடுவே நிறுத்தப்பட்டிருக்கும் சக்கர நாற்காலியானது திடீரென பின்னோக்கி நகர்ந்தது.

தொடர்ந்து யாரோ தள்ளிக் கொண்டு செல்வது போலச் முன்னோக்கிச் சென்ற அந்த சக்கர நாற்காலி ஒரு கட்டத்தில், சிறிய படிக்கட்டு போன்ற  அமைப்பையும் தாண்டிச் சென்றது. இறுதியில் சாலை வரை சென்ற அந்த சக்கர நாற்காலியின் பயணம் அத்துடன் நிறைவு பெற்றது.

சக்கர நாற்காலியின் திடீர் திகில் பயணத்தை இரவுப் பணியில் இருந்த காவலாளி மனோஜ் குமாரும் அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் பார்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மிகவும் வழுவழுப்பான தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த சக்கர நாற்காலி மெல்லிதாக வீசிய காற்றின் காரணமாக அதுபோன்று நகர்ந்திருப்பதாக காவலாளி பீதியுடன் கூறினார்.



Next Story