கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு


கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைப்பு:  உச்சநீதிமன்றம் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Sep 2019 10:56 AM GMT (Updated: 26 Sep 2019 10:56 AM GMT)

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில்  கலந்து கொள்ளாததால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையில், கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற  தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 ஏம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த நிலையில், 15 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதால், இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் வரை தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? என உச்சநீதிமன்றம்,  தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது. இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதால், 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Story