காங்கிரஸ் கட்சியின் புதிய சமூக ஊடக பிரிவு தலைவராக ரோகன் குப்தா நியமனம்


காங்கிரஸ் கட்சியின் புதிய சமூக ஊடக பிரிவு தலைவராக ரோகன் குப்தா நியமனம்
x
தினத்தந்தி 28 Sep 2019 11:55 AM GMT (Updated: 28 Sep 2019 11:55 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் புதிய சமூக ஊடக பிரிவு தலைவராக ரோகன் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவராக திவ்யா ஸ்பந்தனா இருந்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக சமூக ஊடக பிரிவின் புதிய தலைவராக ரோகன் குப்தா என்பவரை காங்கிரஸ் கட்சியின் தலைமை நியமித்து உள்ளது என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.

முன்னாள் எம்.பி.யான திவ்யாவை சில காலங்களாக தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை இருந்தது.  இதனை அடுத்து புதிய சமூக ஊடக பிரிவு தலைவராக ரோகன் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார்.  இவர் இதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவின் ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்தவர்.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் அக்கட்சியின் சமூக ஊடக குழுவை வழி நடத்தி சென்றவர்.  இவரது அரசியல் பிரசார விளம்பர திட்டம் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்தது.  இதனால், 188 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டசபைக்கான தேர்தல் முடிவில், 20 வருடங்களுக்கு பின் பா.ஜ.க.வுக்கு 99 என்ற குறைந்த தொகுதிகளே கிடைத்தன.

Next Story