பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு


பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
x
தினத்தந்தி 2 Oct 2019 11:37 AM GMT (Updated: 2 Oct 2019 11:37 AM GMT)

பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

பாட்னா,

பீகாரில் பெய்து வரும் கன மழை காரணமாக வரலாறு காணாத வெள்ள பாதிப்பை அம்மாநிலம் சந்தித்துள்ளது. அங்குள்ள பாட்னா பாகல்பூர் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கிறது.  கடந்த மாதம் 27- 30  ஆம் தேதி வரையில்  42 பேர் மழை தொடர்பான சம்பவங்களால் பலியாகி  உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 பாட்னாவில் வெள்ளத்தில்  தத்தளித்து வந்த 7 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் தவித்து வரும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய விமான  படையினருடன், மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர், இணைந்து மீட்பு நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளனர்.  தற்போது, அங்கு மழை விட்டுள்ளதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் மோட்டார் பம்புகள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகின்றன.

நேற்று இரவு மழை மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், மக்கள் பொறுமையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

Next Story