டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு அச்சுறுத்தல் விடுத்து இ-மெயில் அனுப்பிய நபர் கைது
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு அச்சுறுத்தல் விடுத்து இ-மெயில் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மாதத்தில் அச்சுறுத்தல் விடுத்து 2 இ-மெயில்கள் அனுப்பப்பட்டன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் வசித்து வரும் மணீஷ் சரஸ்வத் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தொழில் நுட்ப ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story