வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்ச ராணுவ தாக்குதல் இந்தியா கவலை


வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்ச ராணுவ தாக்குதல்  இந்தியா கவலை
x
தினத்தந்தி 10 Oct 2019 12:25 PM GMT (Updated: 10 Oct 2019 12:25 PM GMT)

வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்சமாக ராணுவ தாக்குதல் நடத்தி உள்ளதாக இந்தியா கவலை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

துருக்கிய ஜெட் மற்றும் பீரங்கிகள் சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின இதில்  ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

இந்த நிலையில் குர்திஷ் மக்கள் மீது தாக்கியது தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது:- 

வடகிழக்கு சிரியாவில் துருக்கியின் ஒருதலைப்பட்ச ராணுவத் தாக்குதல் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். துருக்கியின் நடவடிக்கைகள் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும் குறைத்துவிடும். அதன் நடவடிக்கை மனிதாபிமான மற்றும் பொதுமக்கள் துயரத்தை ஏற்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

சிரியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் கட்டுப்படுத்தவும் மதிக்கவும் நாங்கள் துருக்கியை அழைக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளையும் அமைதியாக தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறி உள்ளது.

Next Story