உத்தர பிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து - 10 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தின் வாலித்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை சமையல் செய்துகொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் 2 மாடி கொண்ட அந்த வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. வீட்டில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக தேவையான நிவாரண உதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story