திருப்பதி உண்டியலில் ஒரே பக்தர் 5 கிலோ தங்க நகைகள் காணிக்கை


திருப்பதி உண்டியலில் ஒரே பக்தர் 5 கிலோ தங்க நகைகள் காணிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2019 10:30 PM GMT (Updated: 15 Oct 2019 9:45 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பணக்கார கோவில் என அழைக்கப்படும் அங்கு உண்டியல் வசூல் குவிந்து வருகிறது.

திருப்பதி,

சமீபத்தில் பக்தர் ஒருவர் 5 கிலோ தங்க நகைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார். அதில் உள்ள ஒரு ஒட்டியாணத்தின் விலை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நகைகளை காணிக்கை செலுத்திய பக்தர் யார் என்று தெரியவில்லை. வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் பக்தர் ஒருவர் இந்த நகைகளை காணிக்கையாக செலுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Next Story