புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 22 Oct 2019 2:47 AM GMT (Updated: 22 Oct 2019 2:47 AM GMT)

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி,

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்று காலை முதல் மித அளவிலான மழை பெய்து வருகிறது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  எனினும், சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கனமழையை முன்னிட்டு சேலம் மற்றும் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கும், நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, புதுச்சேரி மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story