இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை


இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற  பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 25 Oct 2019 3:55 AM GMT (Updated: 25 Oct 2019 3:55 AM GMT)

இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பரோவல், 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரோவல் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சர்வதேச எல்லையில் உள்ள வயல்பரப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருநபர் நடமடியதை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் கவனித்தனர். 

பாகிஸ்தானைச்சேர்ந்த அந்த நபர், இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதை கண்டறிந்த எல்லை பாதுகாப்பு படையினர், அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். எச்சரிக்கையை மீறி அந்த நபர் ஊடுருவ முயன்றதால், எல்லை பாதுகாப்பு படையினர் அந்நபரை சுட்டு வீழ்த்தினர். நேற்று இரவு 9.45 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது.


Next Story