பொருளாதார சரிவு விவகாரத்தில் ஏன் இவ்வளவு அமைதி? சிவசேனா கேள்வி


பொருளாதார சரிவு விவகாரத்தில் ஏன் இவ்வளவு அமைதி? சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 28 Oct 2019 8:45 AM GMT (Updated: 28 Oct 2019 8:45 AM GMT)

நாட்டின் பொருளாதார சரிவு நிலை குறித்து மத்திய அரசு ஏன் இவ்வளவு மவுனம் காக்கிறது என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

மும்பை,

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ கட்சி நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நாட்டின் பொருளாதார சூழல் சரிவை நோக்கிச் செல்கிறது. அதிலும் தீபாவளி நேரத்தில் சந்தைகள் மிகவும் மந்தமாக இருக்கும்போது மத்திய அரசு  மவுனம் காப்பது ஏன்? திட்டமிடப்படாமல் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி தவறாக அமல்படுத்தப்பட்டதே இப்போதுள்ள பொருளாதார சரிவுக்கு காரணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜக, சிவசேனா இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில் சிவசேனா மத்திய அரசை விமர்சித்துள்ளது.

Next Story