ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - காங்கிரஸ் விளக்கம்


ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - காங்கிரஸ் விளக்கம்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:30 PM GMT (Updated: 30 Oct 2019 9:47 PM GMT)

ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன் என காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்வுகளில் எதிலும் பங்கேற்கவில்லை. அவர் வெளிநாடு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ராகுல் காந்தி எதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார்? என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘ராகுல் காந்தி தியானம் செய்வதற்காக கடந்த காலங்களில் அடிக்கடி வெளிநாடு சென்று வந்திருக்கிறார். தற்போதும் அதுபோன்ற ஒரு பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்’ என்று கூறினார்.

ராகுல் காந்தி தியானம் செய்வதற்காக இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கலாம் எனவும், அவர் விரைவில் நாடு திரும்புவார் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story