டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வருகிற 10ந்தேதி நடைபெறுகிறது


டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வருகிற 10ந்தேதி நடைபெறுகிறது
x
தினத்தந்தி 7 Nov 2019 6:28 AM GMT (Updated: 7 Nov 2019 6:28 AM GMT)

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வருகிற 10ந்தேதி நடைபெறுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் வருகிற 18ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தொடரில் பொருளாதார மந்தநிலை, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், வேளாண் பொருட்களுக்கு குறைவான விலை, வேலை வாய்ப்பின்மை போன்ற விவகாரங்களை எழுப்பி பொது போராட்டத்தில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இவற்றில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் என்பது ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 6 நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் ஆகும்.  எனினும் இதில் சேர இந்தியா மறுப்பு தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவின் செல்போனில் ‘வாட்ஸ்-அப்’ செயலிக்குள் சட்ட விரோதமாக புகுந்து உளவு பார்த்துள்ளனர் என்றும் ஒட்டுக்கேட்டுள்ளனர் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலே டெல்லியில் செய்தியாளர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார்.  இந்த விவகாரம் பற்றி எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொள்வோம் என்றும், வருங்காலத்தில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் வருகிற 10ந்தேதி நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் குளிர்கால கூட்ட தொடர், பிரியங்கா வாட்ஸ்அப் செயலி வழியே உளவு வேலையில் ஈடுபட்ட விவகாரம் உள்ளிட்டவற்றில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Next Story