சீனாவை விட இந்தியாவில் காற்று மாசு மோசமானதாக இருப்பது ஏன்?


சீனாவை விட இந்தியாவில் காற்று மாசு மோசமானதாக இருப்பது ஏன்?
x
தினத்தந்தி 7 Nov 2019 11:57 AM GMT (Updated: 7 Nov 2019 11:57 AM GMT)

சீனாவை விட இந்தியாவில் காற்று மாசு மோசமானதாக இருப்பது ஏன்? என ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுப்பொருட்களை  எரிப்பதால் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது.  வாகனங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்காக ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.


டெல்லியில் காற்று தர குறியீடு 500-க்கும் மேல் உள்ளது. இது மித அளவை விட 5 மடங்கு அதிகம்.


தீபாவளி பண்டிகைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை காற்று மாசு அபாய அளவை எட்டியது. இதன் காரணமாக நேற்று வரை டெல்லியில் உள்ள  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதுபோல் ஆசியா முழுவதும் உள்ள நகரங்களில் காற்றின் தரம் எப்படி உள்ளது என கீழே பார்ப்போம்.

பெய்ஜிங் நீண்ட காலமாக அதன் புகைமூட்டம் போல் சூழந்த காற்று மாசால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம்  ஆகிய நாடுகளின் நகரங்கள்  மோசமான காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.



சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஐ.க்யூ ஏர்விஷுவல், உலகளவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் குழு மற்றும் கிரீன்பீஸ் ஆகியவற்றின் ஆய்வின்படி  உலகின் மிக மாசுபட்ட  காற்று உள்ள 30 நகரங்களில் 22 இந்தியாவில் உள்ளன என கூறி உள்ளது.

உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரங்கள் சராசரி ஆண்டு பிஎம் 2.5 ஆல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த நாடுகளைப் பார்க்கும்போது, வங்கதேசமே மிக மோசமான காற்றைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பின்னர் இந்தியாவும் உள்ளன. இந்த தரவரிசை அனைத்தும் ஆண்டுக்கு சராசரி காற்றின் தரத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

நகர்ப்புறங்களில் மாசுபாடு பொதுவாக வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பெரும்பாலும் போக்குவரத்து, எரிபொருள் எரியும் மின் நிலையங்கள் மற்றும் கனரக தொழில்கள் ஆகும். 



இந்தியாவில் இருந்து சீனாவை வேறுபடுத்துவது என்னவென்றால்,  விவசாயிகள் தங்கள் வயல்களை இலையுதிர்காலத்தில் அழிக்க விரும்பும் போது விவசாய வயல்களில் வைக்கோல்களை எரிப்பது பொதுவாக  நடைபெறுகிறது. இதனால் காற்றில் அதிக மாசு கலக்கிறது.

இந்த காற்று மாசு என்பது உண்மையில் விவசாயிகள் வயல்களை எரிப்பதால் ஏற்படுகிறது என்று தெரிகிறது என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் உதவி பேராசிரியர் தாமஸ் ஸ்மித் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சீனாவில் விவசாயிகள் வயல்களை எரிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.

காற்று மாசு  பெரும்பாலும் கார்கள் மற்றும் கனரக தொழில்களை மட்டுமே காரணங்களாக கூறினாலும் விவசாய நிலங்களை எரிப்பதும் முக்கியமாகும்.

டெல்லியில் காற்றி மாசு அதிகரித்ததை அடுத்து, டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் வயல்களை எரிப்பதை நிறுத்த  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மாசு அளவுகள் காற்றில் உள்ள ஆபத்தான துகள்களின் அளவை அளவிடுவதன் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக நல்லது முதல்  அபாயகரமானதாக வகைப்படுத்தப்படுகிறது.



மாசு காற்றின் தாக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்டது என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கிறிஸ்டின் கோவி விளக்குகிறார்.

"சிலர் கண்களுக்கு எரிச்சல், தொண்டை, மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகள் இருப்பதாக சிலர் புகார் கூறுகிறார்கள். ஆஸ்துமா இல்லாதவர்களுக்கு கூட இருமல் நிச்சயமாக இருக்கும் இது மிகவும் பொதுவான அறிகுறியாகும். இதில் நிச்சயமாக வயதானவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். மிகவும் இளம் வயதினர்கள் சுவாச நோய்கள் அல்லது இதய பிரச்சினை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் மாசு அளவு கடந்த சில நாட்களில் இந்தியா அனுபவித்த அளவை விட கணிசமாகக் குறைவாக உள்ளது.

Next Story